ஆப்நகரம்

சிக்கப் போகும் எடப்பாடியின் தளபதி? கசியும் முக்கிய தகவல்!

லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்ததாக யாருடைய வீட்டில் சோதனை நடத்த உள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 17 Sep 2021, 12:13 pm
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும் அது தொடர்பாக திரட்டிய ஆதாரங்களையும் கொண்டு எப்படியாவது தண்டனை பெற்றுத் தர வேண்டும் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின் முயன்று வருகிறார்.
Samayam Tamil eps thangamani


முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டது.

அதன்பின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில் எந்த ரெய்டும் நடைபெறவில்லை. கூட்டத் தொடர் முடிந்த இரண்டாவது நாளில் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு பணம், நகை, கார்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

வீரமணி வீட்டில் சிக்கியது என்ன? கருணை காட்டுகிறதா லஞ்ச ஒழிப்புத்துறை?

இந்த சூழலில் அடுத்து எந்த முன்னாள் அமைச்சர் குறி வைக்கப்பட்டுள்ளார் என சிலரிடம் விசாரித்தோம். அதில் எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு தளபதியான தங்கமணியின் பெயர் அடிபடுகிறது.


அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த மின்சாரத் துறை லட்சக்கணக்கான கோடி கடனில் உள்ளது. தற்போது அத்துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வட சென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகியுள்ளதாக கூறியுள்ளார். இதன் மதிப்பு மட்டும் 85 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.

அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு - அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?

இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமியின் தளபதிகளில் ஒருவராக வலம் வந்ததால் தனது செல்வாக்கை தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்துவருவதாக கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி