ஆப்நகரம்

ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் கைது செய்வோம்: ஸ்டாலின்!

தஞ்சாவூர்: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பதே முதல் வேலை என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Jan 2019, 9:02 pm
தஞ்சாவூர்: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பதே முதல் வேலை என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil stalin


தஞ்சை மாவட்டம் மாதா கோட்டையில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் அவர் கூறுகையில்,‘ஆட்சி மாற்றம் வேண்டும் என எதிர்பார்ப்பு நம்மை விட மக்களுக்கு அதிகம் உள்ளது. தமிழகத்தின் அவலநிலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால் தமிழகத்துக்கு தேவையானதை பெற முடியும். லோக்சபா தேர்தலுடன் சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்வோம். கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது, அவரின் உடல்நிலை குறித்து தி.மு.க., முறையாக அறிக்கை கொடுத்தது. என்றார்.

அடுத்த செய்தி