ஆப்நகரம்

உறங்கும் முன்னும், விழித்த பின்னும் இவரைத் தான் கருணாநிதி பார்ப்பார்; இவர் யார் தெரியுமா!

கருணாநிதி மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு நபர் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 10 Aug 2018, 3:21 pm
சென்னை: கருணாநிதி மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு நபர் குறித்து இங்கே காணலாம்.
Samayam Tamil Nithya


திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து 8ஆம் தேதி இரவு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது உறவினர்கள், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் இறுதியாக மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டது.

அந்த வரிசையில் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு வந்த சாமானிய நபர் இருந்தார். தொலைக்காட்சியில் துக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பலரும், இவர் யாரெனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அவர் பெயர் நித்யானந்த்.

கருணாநிதியின் இறுதிக் காலங்களில், அவரின் எல்லாமுமாக இருந்துள்ளார். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த நித்யானந்த், கருணாநிதிக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்துள்ளார். தொடக்கத்தில் சிறு சிறு வேலைகள் செய்ய பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் ஒருகட்டத்தில் கருணாநிதிக்கு தவிர்க்க முடியாத நபராக மாறிவிட்டார். கருணாநிதி மனைவி தயாளு அம்மாளுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யானந்த் அனைத்து பணிவிடைகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எந்தவொரு சூழ்நிலையிலும் நித்யாவை, கருணாநிதி விட்டுக் கொடுத்ததில்லை. ’நித்யா என் சிநேகிதன்’ என்று பலமுறை கூறியிருக்கிறார். மருத்துவமனையில் கருணாநிதி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐயாவை எப்படியாவது மீட்டு கொடுத்து விடுங்கள்.

அவரை இன்னும் 10 ஆண்டுகளுக்கு பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று நித்யா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். கருணாநிதி மறைவால் ஒரு குழந்தையை இழந்த தாயாக நித்யா பெரும் வருத்தத்தில் இருக்கிறார்.

Who is Nithya, Whats the relationship with Karunanidhi.

அடுத்த செய்தி