தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை அருகே ரவுடியால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு கொல்லப்பட்ட காவலர் ஏரல் தாலுகாக்கு உட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்தவராவார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தான் காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தனது முதல் பணியை ஆழ்வார் திருநகரி காவல்நிலையத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது.
பணியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தான் தனிப் படை பிரிவில் காவலராக பணிமாற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு படைப்பிரிவின் காவலர் சுப்பிரமணியன் இணைந்து பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஏரல் வாய்க்கால் கரை அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான துரைமுத்துவை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் துரைமுத்து பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவரை பிடிக்க சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 2ஆவது தலைநகராக சென்னை இருக்கணும்- எம்பி ரவிக்குமார்!
நாட்டு வெடிகுண்டு வீச்சில் சுப்பிரமணியன் உயிரிழந்ததையடுத்து, மற்றொரு காவலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ரவுடி துரைமுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வந்த நிலையில், வீசப்பட்ட வெடிகுண்டில் படுகாயம் அடைந்து துரைமுத்துவும் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரவுடி துரைமுத்து மீது இரு கொலை வழக்குகள் உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தான் தனிப் படை பிரிவில் காவலராக பணிமாற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு படைப்பிரிவின் காவலர் சுப்பிரமணியன் இணைந்து பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஏரல் வாய்க்கால் கரை அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான துரைமுத்துவை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் துரைமுத்து பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவரை பிடிக்க சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் 2ஆவது தலைநகராக சென்னை இருக்கணும்- எம்பி ரவிக்குமார்!
நாட்டு வெடிகுண்டு வீச்சில் சுப்பிரமணியன் உயிரிழந்ததையடுத்து, மற்றொரு காவலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ரவுடி துரைமுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வந்த நிலையில், வீசப்பட்ட வெடிகுண்டில் படுகாயம் அடைந்து துரைமுத்துவும் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரவுடி துரைமுத்து மீது இரு கொலை வழக்குகள் உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.