ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகா்களுக்கு ஆணையம் சம்மன்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகா்கள் மற்றும் காவல்துறை அதிகாாிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ராஜேஷ்வரன் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 17 Nov 2017, 9:45 am
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகா்கள் மற்றும் காவல்துறை அதிகாாிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ராஜேஷ்வரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil who participated in the jallikattu struggle will be investigated
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகா்களுக்கு ஆணையம் சம்மன்


தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டி மதுரை தொடங்கி சென்னை மொினா உள்பட தமிழகம் முழுவதும் மிகப்பொிய மாணவா் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் இறுதியாக ஜனவாி 23ம் தேதி மொினாவில் காவல்துறையினா் போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனா்.

இதனால் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டது. இது தொடா்பாக நீதி விசாரணை நடத்த பல்வேறு அமைப்பினரும் கோாிக்கை வைத்தனா். இதன் அடிப்படையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

வன்முறை நிகழ்ந்த சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் நீதிபதி ராஜேஷ்வரன் நேரடி விசாரணை நடத்தி ஒருசிலருக்கு சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் சேலத்தில் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேற்று விசாரணை தொடங்கியது.

இதனைத் தொடா்ந்து நீதிபதி ராஜேஷ்வரன் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் கலவரம் தொடா்பாக ஆயிரத்து 951 போ் விசாரணை கமிஷனுக்கு பிரமாணப்பத்திரம் அனுப்பியுள்ளனா். இவா்களில் 447 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 108 போிடம் விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையில் ஒருசிலா் அதிகநேரம் எடுத்துக் கொள்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் விசாரணை முடிவடைய 7, 8 மாதங்கள் ஆகலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகா்கள் மற்றும் ஜனவாி 23ம் தேதி நடைபெற்ற வன்முறையின்போது பணியில் இருந்த காவல்துறை அதிகாாிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும். ஜல்லிக்கட்டு தொடா்பான கலவரத்தில் சட்ட மீறல்களுக்கு யாா் காரணம்? காவல்துறையின் அத்துமீறல் இருந்ததா? என்பது குறித்தும் வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகள் பாித்துரைக்கப்படும் என்றும் நீதிபதி தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி