ஆப்நகரம்

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? ரேஸில் முந்தும் அதிகாரி இவர்தான்!

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக யார் பெயரை டிக் அடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 27 Apr 2023, 1:18 pm
தமிழ்நாடு அரசில் தலைமை பதவிகளில் இருக்கும் இரு முக்கிய அதிகாரிகள் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அந்த இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
Samayam Tamil c sylendra babu mk stalin


தலைமைச் செயலாளர் இறையன்பு பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரது இடத்தில் எந்த அதிகாரி அமரப்போகிறார் என்ற பட்டிமன்றம் கோட்டை வட்டாரங்களில் நடைபெறுகிறது. இது ஒருபுறமிருக்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால் அவரது இடத்திற்கு நடைபெறும் போட்டி குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆபரேஷன் காவேரி: சூடானிலிருந்து சொந்த ஊர் திரும்பிய தமிழர்கள்!
மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு நெருக்கமான சோர்ஸ்கள் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் உச்ச பதவியில் உள்ளவர்களை அணுக முயற்சித்து வருகின்றனர்.

இந்த ரேஸில் யார் முன்னணியில் இருக்கிறார் என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் பிகே ரவி ஆகிய மூன்று பேரிடையே போட்டி நிலவுவதாக சில மாதங்களுக்கு முன்னரே சொல்லப்பட்டது. இதில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவாலுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள்.

சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவியேற்றுக் கொண்டால் அவர் தற்போது வகிக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவியை பிடிக்கவும் போட்டி எகிறுகிறது. உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் இந்த ரேஸில் நிற்கின்றனர்.
அமித் ஷாவிடம் எடப்பாடி வைத்த கோரிக்கைகள்: கூட்டணி தொடருமா, உடையுமா?
இந்த மூவரில் டேவிட்சன் ஆசிர்வாதத்துக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இதனால் அவர் தற்போது வகிக்கும் பதவியை குறி வைத்தும் அதிகாரிகள் காய் நகர்த்த தொடங்கி விட்டனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி