ஆப்நகரம்

தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார்? ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி வகிக்கும் சைலேந்திர பாபுவின் பணிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் என்ற கேள்வி கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

Samayam Tamil 14 Feb 2023, 5:29 pm
தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் தலைமை பொறுப்பை அலங்கரிக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு பணிக்காலம் முடிவடையும் நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது காவல்துறையின் தலைவரான டிஜிபி சைலேந்திரபாபுவின் பணிக்காலம் நிறைவடைய உள்ளது. இருவரது இடங்களையும் சரியான நபர்கள் கொண்டு நிரப்ப வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
Samayam Tamil who will be the next law and order dgp of tamil nadu after c sylendra babu what was mk stalin decision
தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார்? ஸ்டாலின் எடுக்கும் முடிவு என்ன?


ஸ்டாலின் தேர்ந்தெடுத்த இருவர்!

முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்ற பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தினார் ஸ்டாலின். அது மக்களிடையே வரவேற்பும் பெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பும், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவும் ஏற்கெனவே மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் பெற்றிருந்தனர். இருவருமே மாணவர்கள், இளைஞர்களிடம் அதிகமாக உரையாடலை நிகழ்த்தியவர்கள். இறையன்பு மேடை பேச்சுக்கள் மூலமும் புத்தகங்கள் மூலமும் அறிமுகமானவர் என்றால் சைலேந்திரபாபு உடல்நலத்தை வலியுறுத்தி வெளியிடும் வீடியோக்களால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார்.

ஸ்டாலின் சாய்ஸ் எது?

இறையன்பு பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவரது இடத்தை பிடிப்பதில் சிவதாஸ் மீனா, அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன் இடையே போட்டி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க சைலேந்திர பாபுவின் இடத்தில் ஸ்டாலின் யாரை கொண்டு வருவார் என்ற பேச்சுக்களும் அதிகரித்துள்ளன.

சைலேந்திரபாபு முன்னெடுத்த பணிகள்!

சைலேந்திரபாபு தனது பணிக்காலத்தில் ஆபரேஷன் வேட்டை கஞ்சா 2.0, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் தடுப்பில் அதிரடி காட்டினார். அடுத்து டிஜிபியாக பதவிக்கு வருபவரும் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குபவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.

டிஜிபியாக யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு: சத்தமில்லாமல் உயரும் நாம் தமிழர் வாக்கு வங்கி! சீமான் பலே பிளான்!

சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் பிகே ரவி ஆகிய மூன்று பேரிடையே போட்டி நிலவுவதாக சொல்கிறார்கள். பி.கே.ரவி சமீபத்தில் தான் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுவிட்டு திரும்பினார். ஏ.கே.விஸ்வநாதன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கம் பாராட்டினார் என்றொரு தகவலும் வெளியானது. எனவே சங்கர் ஜிவாலுக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு காவல்துறையிலும், அரசு நிர்வாகத்திலும் உச்ச பதவிகளில் இருப்பவர்களுக்கு பதிலாக புதியவர்கள் வரவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசுக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்பட உள்ளதாக கூறுகின்றனர்.

அடுத்த செய்தி