ஆப்நகரம்

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதா?

இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் தேர்தல் ஆணையர் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 19 Mar 2017, 6:10 pm
இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் தேர்தல் ஆணையர் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil who will get two leafs symbol
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதா?


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சியானது சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கிறது. இந்த இரண்டு பிரிவினருமே இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் சொந்தம் எனக் கூறி வருகின்றனர். இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து மனுக்களை இருதரப்பினரும் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக இரு தரப்பினரையும் வரும் 22-ஆம் தேதி டெல்லிக்கு அழைத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உள்ளது. இந்த விசாரணையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனில் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. குறிப்பாக அதிமுக கட்சியின் சட்ட திட்டங்களை இந்த விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். ஒரு வேளை எந்த தரப்பிற்கும் சார்பான முடிவு எடுக்கப்படவில்லை எனில், இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.” என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

Who will get two leafs symbol?

அடுத்த செய்தி