ஆப்நகரம்

மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்: அரசு எடுக்கும் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் நிலை குறித்து அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2022, 11:58 am
தமிழ்நாட்டில் சில பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டாததால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
Samayam Tamil college students


இந்நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் பேசினார்.

பேரவையில் பேசிய அமைச்சர், “திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்க அவசியம் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருக்க கூடிய கல்லூரிகள் திருப்பூர் மாவட்டர்ரில் உள்ள மாணவர்களின் உயர் கல்வி தேவையை நிவர்த்தி செய்ய போதுமானதாக இருக்கிறது.
எடப்பாடி கட்டும் மனக்கோட்டை: செங்கலை உருவும் சசிகலா
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் கட்டியுள்ளவர்கள் அதை மூடி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 6 சுயநதி பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடம் உள்ளது. இதில் 1 லட்சத்து 28 ஆயிரம் இடம் நிரம்பியுள்ளது. 72 ஆயிரம் காலியாக உள்ளது.

வரும் காலங்கள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் அறிவித்து பொறியியல் கல்லூரிக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தொழில் முனைவோர்களிடம், ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு பணிகள் நடைபெறுகிறது.
தருமபுரம் ஆதீனம்: முதல்வர் நல்ல முடிவெடுப்பார் - அமைச்சர் நம்பிக்கை!
வரும் காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வரும் காலங்களில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி