ஆப்நகரம்

நிராயுதபாணியாக ஜெயலலிதா கொல்லப்பட்டார்: பி.எச்.பாண்டியன் !

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கருப்பு பூனைப்படையை வாபஸ் பெற்றதால் நிராயுத பாணியாக ஜெயலலிதா கொல்லப்பட்டதாக உண்ணாவிரத போராட்டத்தில், முன்னாள் சபாநாயகரான பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.

TOI Contributor 9 Mar 2017, 5:54 am
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கருப்பு பூனைப்படையை வாபஸ் பெற்றதால் நிராயுத பாணியாக ஜெயலலிதா கொல்லப்பட்டதாக உண்ணாவிரத போராட்டத்தில்,
Samayam Tamil why black cats protection has withdrawn while jayalalitha admitted in the apollo hospital asks p h pandian in a meeting
நிராயுதபாணியாக ஜெயலலிதா கொல்லப்பட்டார்: பி.எச்.பாண்டியன் !

முன்னாள் சபாநாயகரான பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.

அப்போது, பி.எச். பாண்டியன் பேசுகையில்,’ நாங்கள் அனைவரும் அம்மா அவர்களால் பயன்பெற்றவர்கள், அன்பை பெற்றவர்கள். நம் பாதுகாப்பை உறுதி செய்த அம்மாவின் பாதுகாப்பை இல்லாமல் ஆக்கிவிட்டு, அவரது ஆயுளை முடித்துவிட்டார்களே என நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

'அம்மா' ஆஸ்பத்திரிக்கு போகும்போது கருப்பு பூனை போகவில்லை. அவர் அங்கிருந்த 75 நாட்களும் அப்பல்லோவில் கருப்பு பூனை படை பாதுகாப்பை நான் பார்க்கவில்லை. நிராயுதபாணியாக 'அம்மாவை' ஆக்கிவிட்டு அவரது உயிரை இந்த சதிகார கும்பல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. என்றார்.

Why Black cats protection has withdrawn while Jayalalitha admitted in the Apollo hospital, asks, P.H.Pandian in a meeting.

அடுத்த செய்தி