ஆப்நகரம்

பொன்.ராதாகிருஷ்ணன்: தூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றால், இழப்பீடு ஏன்? பொன்.ராதா கேள்வி

பயங்கரவாதிகளுக்கு ஏன் இழப்பீடு வழங்குகிறீர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 1 Jun 2018, 10:40 am
சென்னை: பயங்கரவாதிகளுக்கு ஏன் இழப்பீடு வழங்குகிறீர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil Pon Radhakrishnan.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவையை புறக்கணித்து நாடகத்தன்மை நிறைந்த போலித்தனமான சட்டப்பேரவை ஒன்றை திமுக நடத்துவது ஏன்?

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் பங்கேற்றால் பொதுமக்கள் கேள்வி கேட்பார்கள் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதா என்றார். திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் பேசிக் கொண்டு, சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துகின்றன.

தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் பேருந்துக்கு தீவைத்ததில், பெண் ஒருவர் உயிரிழந்தார். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.20 இழப்பீடு வழங்கியது பாராட்டுக்குரியது.

ஆனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று தமிழக அரசு கூறுகிறது. எனில், பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு வழங்குவது ஏன்? என பதிலளிக்க வேண்டும்.

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூற திமுக ஏன் தயக்கம் காட்டுகிறது. தமிழக நடக்கும் இதுபோன்ற விஷயங்கள் மக்களுக்கு சந்தேகங்களை எழுப்பியுள்ளன என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Why compensation for Terrorists in Tuticorin issue asks Pon.Radhakrishnan.

அடுத்த செய்தி