ஆப்நகரம்

ஏகேஎஸ் விஜயனுக்கு பதவி: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்ச ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Samayam Tamil 16 Jun 2021, 12:54 pm
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக யாரை நியமிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் நிலவியது. மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு அந்தப் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. தமிழ்நாடு கேபினட் அமைச்சருக்கு நிகரான பதவி என கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விட தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதிக்கு உடனடியாக நேரம் ஒதுக்கப்படும்.
Samayam Tamil mk stalin aks vijayan


அந்த வகையில் சபரீசனை அந்த பதவிக்கு கொண்டு வந்து ஸ்டாலின் தனது டெல்லி அரசியலை அவர் மூலம் கவனிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் குடும்ப அரசியல் என்ற விமர்சனம் மீண்டும் எழும் என்பதால் அந்த முடிவை இப்போது ஸ்டாலின் எடுக்கவில்லை.
விஜயபாஸ்கரை அதிமுக தலைமை கண்டுகொள்ளாதது ஏன்?
இந்நிலையில் நாடாளுமன்ற பணிகளில் அனுபவம் வாய்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏகேஎஸ் விஜயன் நியமிக்கப்பட்டார். இன்று டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏகேஎஸ் விஜயனுக்கு எப்படி இந்த பதவி வழங்கப்பட்டது, அதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏகேஎஸ் விஜயன் அனுபவம் வாய்ந்தவர் என்றாலும் ஸ்டாலின் சில விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே விஜயனை தேர்வு செய்ததாக கூறுகிறார்கள்.
பள்ளிகள் திறப்பு எப்போது? மருத்துவர்கள் சொல்வது இதுதான்!
அமைச்சரவை பதவியேற்ற பின் எழுந்த முக்கிய விமர்சனங்களில் ஒன்று ஸ்டாலின் டெல்டாவை புறக்கணித்துவிட்டார் என்பதுதான். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து ஒருவர் கூட அமைச்சரவை பட்டியலில் இடம்பெறவில்லை. இது விமர்சனத்தை எழுப்பிய நிலையில் முதல்வராகிய நானே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் தானே என சமாளித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுகவின் கொறடாவாக டெல்டாவைச் சேர்ந்த கோ.வி.செழியன் நியமிக்கப்பட்டார். தற்போது கேபினட்டுக்கு இணையாக கூறப்படும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி டெல்டாவைச் சேர்ந்த விஜயனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
அதிகாரிகள் பேச்சை கேட்கும் ஸ்டாலின்? அமைச்சர்கள் கதறல்!
திமுக மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவும் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஏகேஎஸ் விஜயனுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி