ஆப்நகரம்

தெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்-தமிழிசை

தெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன் என தமிழிசை செளந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Samayam Tamil 15 May 2019, 12:51 pm
தெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன் என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
Samayam Tamil தெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்-தமிழிசை
தெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்-தமிழிசை


தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரவிச்சந்திரன் என்பவரை அவரது மனைவியின் வேண்டுகோளின் படி, தமிழிசை செளந்தரராஜன் இன்று நேரில் சந்தித்தார். அவருக்கு மேலும் கூடுதல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் காப்பீடு திட்டமும், முதல்வரின் காப்பீடு திட்டமும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த இரு திட்டங்களில் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைய தகுதி பெற்றுள்ளனர் என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரவிச்சந்திரனை சந்தித்த தமிழிசை


தொடர்ந்து எந்த மதமும் தீவரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என பேசிய பேச்சுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிப்பது கவலையாக உள்ளது. கமல்ஹாசன் இப்படி பேசுவதை பார்த்தால் தூண்டுதலின் பேரில் யாரோ பின் இருந்து இயக்குகிறார்களோ என்ற ஐயம் உள்ளது. அவரை பின்னால் இருந்து இயக்குகின்ற சக்தி எது? அரசியல் கூட்டத்தில் இடைத்தேர்தலில் இதை பேசவேண்டிய அவசியம் இல்லை.

வட இந்தியாவில் பிரிவினைவாதமாக பேசிய காரணத்தால் சிலர் பிரச்சாரம் தடை செய்யபபட்டுள்ளது. அதுபோல் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும். கமல் தனது கருத்துகளை திரும்ப பெற வேண்டும் என்றார்.

மேலும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பார்த்த பிறகு திமுக அவர்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அடுத்த செய்தி