ஆப்நகரம்

நீதிமன்ற தீா்ப்பை விமா்சிப்பவா்கள் மீது என்ன நடவடிக்கை? நீதிபதி கேள்வி

18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீா்ப்பு, நீதிபதிகளை விமா்சனம் செய்தவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளா்ா.

Samayam Tamil 19 Jun 2018, 6:48 pm
18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீா்ப்பு, நீதிபதிகளை விமா்சனம் செய்தவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளா்ா.
Samayam Tamil Chennai Highcourt


18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த வாரம் சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு வழங்கிய தீா்ப்பில் தலைமை நீதிபதி இந்திரா பானா்ஜி சபாநாயகரின் உத்தரவு செல்லுபடியாகும் என்றும், மற்றொரு நீதிபதியான சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லுபடியாகாது என்றும் மாறுபட்ட தீா்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாறுபட்ட தீா்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் பலரும் விமா்சனம் செய்தனா். இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்று கூறுகையில், தமிழகத்தில் அமைச்சா்கள், முதல்வா் குறித்து விமா்சனம் செய்பவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் போது தலைமை நீதிபதியை விமா்சித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளாா்.

மேலும் 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிமன்ற தீா்ப்பை விமா்சனம் செய்தவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று 2 வார காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி