ஆப்நகரம்

சசிகலாவிடம் விசாரணை: பதறும் எடப்பாடி பழனிசாமி - ஸ்கெட்ச் யாருக்கு?

சசிகலாவிடம் இன்று தனிப்படை போலீஸார் கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துகிறார்கள்.

Samayam Tamil 21 Apr 2022, 8:11 am
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சசிகலாவுக்கு விசாரணையில் பங்கேற்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil sasikala eps


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை நடத்தியது. இருப்பினும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்குவாரா என்று கேள்விகள் எழுந்தன. அந்த சமயத்தில் தான் கொடநாடு கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக இன்று விசாரணை நடைபெறுகிறது. ஏற்கெனவே சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டதா? டிஜிபிக்கு சென்ற முழு ரிப்போர்ட்!
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டுகள் தண்டனை பெற்று வந்த சசிகலாவுக்கு திரும்பும் திசையெங்கும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன. பெங்களூர் சிறை வழக்கு, வருமான வரித்துறையால் சொத்துகள் முடக்கப்பட்டது, அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என அடுத்தடுத்து சசிகலாவுக்கு சிக்கலாகவே இருந்துள்ளது. இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காமல் சசிகலாவை விசாரிக்கிறார்களே என அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை: அலர்ட் கொடுத்த அமைச்சர்!
ஆனால் போலீஸ் வட்டாரங்களில் வேறு தகவல்களைச் சொல்கிறார்கள். சசிகலாவிடம் விசாரணை நடத்துவதன் மூலம் சிக்கல் எடப்பாடி பழனிசாமிக்கு தான். கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருள்கள் இருந்தன என்பது சசிகலாவுக்கு தான் நன்றாக தெரியும். அந்த வகையில் அதை கேட்டு தெரிந்துகொள்ளும் விதமாகவே நிறைய கேள்விகள் இருக்கும் என்கிறார்கள். சசிகலா அளிக்கும் பதிலை தொடர்ந்தே அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை இருக்குமாம்.

இதனால் சசிகலாவை விட எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக சொல்கிறார்கள்.

அடுத்த செய்தி