ஆப்நகரம்

விஜயபாஸ்கரை அதிமுக தலைமை கண்டுகொள்ளாதது ஏன்?

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு ஏன் சட்டமன்ற நிர்வாக பதவி எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 16 Jun 2021, 11:10 am
சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடா, துணை கொறடா உள்ளிட்ட சில பதவிகளுக்கான ஆள்களை நியமிப்பதில் அதிமுகவுக்குள் இழுபறி நிலவியது. இந்நிலையில் ஒருவழியாக ஜூன் 14ஆம் தேதி அதற்கு முடிவு காணப்பட்டது.
Samayam Tamil c vijayabaskar


அந்த வகையில் எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவியும், பொருளாளராக கடம்பூர் ராஜூவும், செயலாளராக கே.பி.அன்பழகனும், துணைச் செயலாளராக பி.எச்.மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடிக்கு கிடைக்காதது ஸ்டாலினுக்கு கிடைக்குமா? என்ன செய்வார் மோடி?
இந்த பதவிகளில் ஏதேனும் ஒன்றை கைப்பற்ற பலரும் முயற்சித்தனர். அதில் முக்கியமானவர் சி.விஜயபாஸ்கர். இதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கேட்டதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் இரட்டை தலைமை இவரை கைவிட்டது ஏன் என விசாரித்தால் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

இரட்டை தலைமை என்று சொன்னாலும் எடப்பாடி பழனிசாமியின் வாய்ஸ் மட்டுமே அதிமுகவில் எடுபடுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்படும் மனோஜ் பாண்டியனுக்கும், டிடிவி தினகரனை வீழ்த்திய கடம்பூர் ராஜுவுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் எடப்பாடியின் வலது கரமான எஸ்.பி.வேலுமணிக்கும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கரோ எந்த பக்கம் நிற்கிறார் என உறுதியாக சொல்லமுடியாது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
அதிகாரிகள் பேச்சை கேட்கும் ஸ்டாலின்? அமைச்சர்கள் கதறல்!
கூவத்தூர் எபிசோடில் சசிகலா தரப்புக்கு ஆதரவாக அவரது நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தவர் விஜயபாஸ்கர். தற்போது அவர்களோடு தொடர்பில்லை என்று கூறினாலும் சசிகலா எப்போது வேண்டுமானாலும் கலகத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதே சமயம் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து திமுக ஊழல் புகார்களை தூசி தட்டி லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கிவிட ஆயத்தமாகிவருகிறது. அதிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.
பள்ளிகள் திறப்பு எப்போது? மருத்துவர்கள் சொல்வது இதுதான்!
தற்போது விஜயபாஸ்கரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி விராலிமலை திமுக வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்தே விஜயபாஸ்கருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத ரத்தத்தின் ரத்தங்கள்.

அடுத்த செய்தி