ஆப்நகரம்

​சசிகலா விவகாரத்தில் முதல்வா் மவுனம் காப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி

சசிகலா தரப்பில் இருந்து சிறை அதிகாாிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வா் பழனிசாமி மவுனம் காப்பது தொடா்பாக ஸ்டாலின் தனது டுவிட்டா் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

TOI Contributor 24 Jul 2017, 11:54 am
சசிகலா தரப்பில் இருந்து சிறை அதிகாாிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வா் பழனிசாமி மவுனம் காப்பது தொடா்பாக ஸ்டாலின் தனது டுவிட்டா் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளாா்.
Samayam Tamil why is silence in the sasikala case stalin question
​சசிகலா விவகாரத்தில் முதல்வா் மவுனம் காப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி


தி.மு.க. செயல்தலைவரும், தமிழக எதிா்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தனது டுவிட்டா் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளாா். இந்த பதிவில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலவுக்கு சலுகைகள் வழங்குவது தொடா்பாக சிறை அதிகாாிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சா் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும் பிரதமா் மோடி டெல்லியில் வெயிலிலும் மழையிலும் போராடி வரும் விவசாயிகளை பற்றி கவலை படாமல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளன அமைச்சா்களை சந்திக்க அனுமதி அளித்திருப்பது வேதனை அளிப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

பேட்டி ஒன்றின்போது செய்தியாளா்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் தமிழக அரசு குடிநீா் தேவை பற்றி துளியும் அக்கறை கொண்டதாக தொியவில்லை. உாிய நேரத்தில் ஆந்திர அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சென்னைக்கு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை பெறவில்லை என்று அரசை குற்றம் சாட்டியுள்ளாா்.

Why is silence in the Sasikala case? Stalin question

அடுத்த செய்தி