ஆப்நகரம்

மாணவர்கள் வருகை குறைகிறதா? விளக்கம் கேட்கும் பள்ளிக் கல்வித்துறை!

மாணவர்கள் வருகைப் பதிவு குறைந்தது ஏன் என விளக்கம் கேட்கப்பட்டது, இது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Apr 2022, 6:56 am
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் முழுவீச்சில் பொதுத்தேர்வுக்கு தயாராகிவருகின்றனர்.
Samayam Tamil tn school emis


ஆரம்பத்தில் கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் வருகை குறைவாக இருந்தாலும் பின்னர் அதிகளவில் மாணவர்கள் வருகைபுரியத் தொடங்கினர். கடந்த சில மாதங்களாக, எமிஸ் இணையதளத்தின் கீழ் மாணவர்களின் வருகைப்பதிவு ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குள் மாணவர்களின் வருகையை ஆன்லைன் மூலமாக பதிவேற்ற வேண்டும். கோவையில் பள்ளிகளின் மாணவர்கள் வருகைப் பதிவு ஆய்வு செய்யப்பட்ட போது, பல பள்ளிகளில் வருகைப் பதிவு 75 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா: அடுத்த லாக்டவுண்? மாவட்டங்களுக்கு பறந்த உத்தரவு!
மாணவர்கள் வருகை இவ்வளவு குறைந்ததற்கு என்ன காரணம் என விசாரிக்கையில் சர்வர் சிக்கல், போதிய இணைய வசதி இல்லாமை ஆகியவற்றின் காரணமாக வருகைப் பதிவை குறிப்பிட்ட நேரத்துக்குள் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாலை, இரவு வரை வருகைப் பதிவு பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி அருளானந்தம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "ஆன்லைன் வருகைப் பதிவை ஆசிரியர்கள் அவரவர் மொபைல் போன் மூலம் மேற்கொள்கின்றனர்.
அதிமுக அலுவலகத்தில் மீண்டும் சசிகலா விவகாரம்: பாதியில் வெளியேறிய மாஜி!
சிக்னல் கோளாறு காரணமாக பதிவு செய்த பின் 'கிரீன் சிக்னல்' வர நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. அரசு, அனைத்து பள்ளிகளிலும் இணைய வேகம் அதிகமாக கிடைக்கும் வகையில் 'வை-பை' வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் எமிஸ் பதிவு மற்றும் ஆன்லைன் வருகைப் பதிவில் சிக்கல் இருக்காது" என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி