ஆப்நகரம்

நீட் தேர்வு மையம் குறைந்ததற்கு நாங்கள் காரணம் இல்லை - சிபிஎஸ்இ-யை விசாரிக்கவும் -தமிழிசை

நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு மட்டு குறைவான தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து சிபிஎஸ்இ தலைவரிடம் விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 May 2018, 8:17 am
வேலூர் : நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு மட்டு குறைவான தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து சிபிஎஸ்இ தலைவரிடம் விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilisai


கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூரு செல்லும் தமிழிசை செளந்தராஜன் வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்றார். ஆனால் அவர் செல்லும் போது மாணவர்கள் தேர்வு எழுத துவங்கிவிட்டதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “கடந்த ஆண்டு தமிழகத்தில் 82 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஆனால் இந்தாண்டு 1.07 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். நீட் தேர்வை எதிகட்சிகள் எதிர்த்தாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு ஆதரவாக தான் உள்ளனர் என இதிலிருந்து தெரிகிறது.

தமிழக மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவித்ததும் விண்ணப்பித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் கிடைத்துள்ளன. மற்ற சில மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏன் தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு மையங்கள் குறைவு என சிபிஎஸ்இ தலைவரிடம் தான் விசாரிக்க வேண்டும், அதை விடுத்து மத்திய,மாநில அரசை விமர்சிப்பது தவறு.” என தமிழிசை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி