ஆப்நகரம்

தாய்ப்பால் கட்டாயமாக்காதது ஏன்? அரசுக்கு நீதிபதி கிருபாகரன் சராமரி கேள்வி

சென்னை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தாய்ப்பாலை கட்டாயமாக்காதது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

TNN 2 Jan 2018, 3:27 pm
சென்னை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தாய்ப்பாலை கட்டாயமாக்காதது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
Samayam Tamil why tamil nadu has not compulsor of mother breastfeed justice kirubakaran questioning
தாய்ப்பால் கட்டாயமாக்காதது ஏன்? அரசுக்கு நீதிபதி கிருபாகரன் சராமரி கேள்வி


இது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் மாநில, மத்திய அரசிடம், பேறுகால விடுப்பு கால 6 மாதம் முதல் 2 ஆண்டு வரையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்றும் குழந்தைகளுக்கான உணவுப்பொருள் விளம்பரப்படுத்துதல் தடைச்சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மூலம் ஏன் விழிப்புணர்வு கொண்டு வரக்கூடாது என்றும் தமிழகம் போல மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கும் பேறுகால விடுமுறையை 9 மாதமாக ஏன் அதிகரிக்கக் கூடாது? என்றும் சராமாரியாக கேள்வி கேட்டார்.

இது தொடர்பாக ஜனவரி 22-க்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி