ஆப்நகரம்

ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை தாமதம் ஏன்? மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்!

வாக்கு எண்ணிக்கை விவரங்களை அறிவிக்க தாமதம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 2 Mar 2023, 10:47 am
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் மிஷின்களில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கினர். மொத்தம் 15 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Samayam Tamil krishnan unni


முதல் இரு சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் அதன் விவரம் வெளியிடப்பட்டது. அதன் படி காங்கிரஸ் கட்சி 17417 வாக்குகளும் அதிமுக 5598 வாக்குகளும் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி 1479 வாக்குகளும், தேமுதிக 206 வாக்குகளும் பெற்றுள்ளன.

இரண்டு சுற்றுக்கள் முடிவடைந்து காலை உணவுக்குப் பின்னர் மூன்றாம் சுற்று தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. அத்துடன் சுற்று முடிவுகளை காலதாமதமாக அறிவிப்பதாக புகார் எழுந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Erode east election 2023 results live updates: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உண்ணி செய்தியாளர்களிடம் விளக்கினார்.

“வாக்கு எண்ணும் அறையில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மேஜையிலும் மைக்ரோ அப்சர்வர் இருக்கிறது. ஒரு சுற்றை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற கால நிர்ணயம் இல்லை. வெளிப்படை தன்மையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: முந்தும் திமுக கூட்டணி!
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தை உறுதிப்படுத்தி அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் ஆனால் தவறாக சொல்லிவிடக்கூடாது. அடுத்தடுத்த சுற்றுக்கள் விரைவாக இருக்கும்.” என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி