ஆப்நகரம்

ஜெயலலிதா கைரேகை பதிவு: பண்ருட்டியார் புது விளக்கம்

''முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், கையெழுத்தில் மாற்றம் ஏற்படக் கூடாது என்பதால் கைரேகை வைத்தார்'' என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

TOI Contributor 2 Nov 2016, 1:35 pm
''முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், கையெழுத்தில் மாற்றம் ஏற்படக் கூடாது என்பதால் கைரேகை வைத்தார்'' என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil why tn cm jayalalithaa has put her thumb impression paruti ramachandran explains
ஜெயலலிதா கைரேகை பதிவு: பண்ருட்டியார் புது விளக்கம்


வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான மனுவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்து இருந்தார். இதற்கு தேர்தல் கமிஷனும் அனுமதி அளித்து இருந்தது.

இதுபற்றி இன்று அப்பல்லோ மருத்துவமனை வந்திருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''முதலமைச்சருக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருவதால்தான் அவரால் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான மனுவில் கையெழுத்திட முடியவில்லை. இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்திருந்தார். கையெழுத்தில் மாற்றம் இருந்தால் தேர்தல் ஆணையம் மனுவை ஏற்காது என்பதால் கைரேகை பதிவு செய்தார்'' என்றார்.

இதே கருத்தை இன்று மருத்துவமனை வந்திருந்த அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியும் தெரிவித்து இருந்தார். மேலும், விரைவில் அம்மா குணமடைந்து மக்கள் சேவை ஆற்றுவார்'' என்றார் சரஸ்வதி.

அடுத்த செய்தி