ஆப்நகரம்

ஜெயலலிதா குடும்பத்தைப் பிரிந்தது ஏன்? கல்யாணம் காரணமா?

ஜெயலலிதா தனது குடும்பத்தினரை பிரிந்து சென்றதன் பின்னணியையும் அந்த சமயத்தில் அவரது விருப்பதுடன் திருமண ஏற்பாடு நடைபெற்றதையும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 8 Dec 2018, 4:07 pm
ஜெயலலிதா தனது குடும்பத்தினரை பிரிந்து சென்றதன் பின்னணியையும் அவருக்கு அந்த சமயத்தில் திருமண ஏற்பாடு நடைபெற்றதையும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil -62170003800_j-jayalalithaa-new-delhi-9-april-1984


ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ஜெயலலிதாவின் உறவினர்கள் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “அத்தை முதன்முறையாக அரசியலில் காலூன்றி ஜெயிக்கும் வரை ப்ரியமாகவும், சுமுகமாகவும் எங்களுடன் பழகினார். அதிமுகவின் செயலாளராக ஜெயித்த பிறகு அவருக்கும், எங்களுக்கும் இடைவெளி ஏற்படத் தொடங்கியது.” என்றார்.
என் அப்பா உட்பட உறவினர்களில் பலருக்கு அவருடைய அரசியல் ஈடுபாடு பிடிக்கவில்லை என்பதால் எங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தில் அவருடைய தலைமுறை உறவினர்களுடைய இறப்பைக்கூட கண்டுகொள்ளாமல் இருந்தார். அதனால் விலகி இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டோம். எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போது அவருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் மைசூரைச் சேர்ந்த அருண் குமார் என்பவரை பிடித்துப்போய் அவரைத் திருமணம் செய்துள்ள ஜெயலலிதாவும் விரும்பினார் என்றும் மற்றொரு உறவினர் கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி