ஆப்நகரம்

ஏன் திடீர் ஊரடங்கு அறிவிப்பு? ஸ்டாலின் காட்டிய க்ரீன் சிக்னல்!

பொது முடக்க அறிவிப்புகள் புதிய அரசு அமைவதற்கு முன் ஏன் வெளியானது என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 5 May 2021, 8:11 am
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில் பொது முடக்கம் மட்டுமே தற்போது இந்த பாதிப்பை கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் (மே 3) இரவு பொது முடக்க கட்டுப்பாட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil why were lockdown notice issued before the new government was formed is it mk stalin decision
ஏன் திடீர் ஊரடங்கு அறிவிப்பு? ஸ்டாலின் காட்டிய க்ரீன் சிக்னல்!


அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!

அதன்படி மே 6ஆம் தேதி முதல் காய்கறிக் கடைகள், பலசரக்கு கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை மதியம் 12 மணிக்கு வரை மட்டுமே திறந்திருக்கும். அரசு, தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திலும் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மே 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இப்போது இந்த அறிவிப்பு?


தமிழகத்தில் பேருந்து சேவை ரத்தாகுமா? அரசின் முடிவால் அதிர்ச்சி!

தமிழகத்தில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு ஆகியவை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே புதிய அரசு அமைந்ததும் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ஏன் இந்த திடீர் அறிவிப்பு என விசாரித்தோம்.

ஸ்டாலினை நோக்கிச் சென்ற சுகாதாரத் துறை

ரேஷன் இலவசம்: நிவாரணத் தொகை 5000 ரூ - அரசு அதிரடி அறிவிப்பு!

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தபோது திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்துக் கொண்டிருந்தபோதே பல்வேறு அதிகாரிகள் சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். அதனால் அப்போது அந்தப் பகுதி அதிகாரிகளால் நிரம்பி வழிந்தது. அந்த சமயம் ஒரு கையில் பூங்கொத்துடனும் ஒரு கையில் முக்கிய கோப்பு ஒன்றுடனும் என்ட்ரி கொடுத்தார் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

ஸ்டாலினிடம் விவரித்த அதிகாரிகள்!

நாடு முழுவதும் முழு ஊரடங்கு போட சொல்லி பரிந்துரை!

வாழ்த்து தெரிவித்ததோடு கொரோனா பாதிப்பு நிலவரம், எடுக்கப்படும் நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என அப்போதே ஸ்டாலினிடம் விவரித்துள்ளார். நேற்று முன் தினம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ராதாகிருஷ்ணன், பணீந்திர ரெட்டி, ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளனர். பொது முடக்கம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த தற்போதைய வழி என உறுதியாக கூறியுள்ளனர்.

அதிகாரிகளுக்கு தயக்கம்!

அதிகாரிகள் தங்களுக்குள் இதை கடந்த சில வாரங்களாக பேசி வந்தாலும் காபந்து அரசு இருப்பதால் அதை செயல்படுத்துவதில் தயக்கம் இருந்தது. எடப்பாடி பழனிசாமியும் அப்போதே கையை விரித்துவிட்டார். இதனால்தான் புதிய அரசு வரட்டும் அதன்பின் பார்த்துக் கொள்ளலாம் என தற்போதைய கட்டுப்பாடுகளே தொடரும் என கடந்த மாத இறுதியில் அறிவித்தனர்.

சம்மதம் சொன்ன ஸ்டாலின்!

உதயநிதி வெற்றி: ஸ்டாலின் கொடுக்கும் அந்த பதவி - காரணம் இதுதான்!

ஸ்டாலினைப் பொறுத்தவரை இன்னொரு பொது முடக்கத்தை தாங்க முடியாது என சமீப நாள்களிலேயே இரு முறை அறிக்கை வாயிலாக கூறியிருந்தார். ஆனால் நிலைமை மோசமடைவதையும் உணர்ந்துள்ளார். ஆட்சிக்கு வந்ததும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என திட்டமிட்டுள்ள நிலையில் ஊரடங்கு அறிவிப்பை அறிவிக்க வேண்டாம் என்பதாலேயே இப்போதே அதற்கான அறிவிப்பை வெளியிட சம்மதித்துள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி