ஆப்நகரம்

தமிழகத்தில் முதன்முறையாக 1,000-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் கண்டெடுப்பு

தமிழகத்தில் முதன்முறையாக ராமேஸ்வரம் பகுதியில் 1,300 கடல் ஆமை முட்டைகளை ஒரே நாளில் வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

TOI Contributor 27 Feb 2018, 1:46 am
தமிழகத்தில் முதன்முறையாக ராமேஸ்வரம் பகுதியில் 1,300 கடல் ஆமை முட்டைகளை ஒரே நாளில் வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
Samayam Tamil wildlife officials in ramanathapuram recover 1489 turtle eggs on a single day
தமிழகத்தில் முதன்முறையாக 1,000-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் கண்டெடுப்பு


பொதுவாக ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் கடல்பகுதியில் முட்டையிடும். இந்த ஆமை முட்டைகளை மற்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வனத்துறையினர் கண்டெடுத்து சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள், செயற்கையான பொறிப்பகத்தில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு குஞ்சு பொறித்தவுடன் அவற்றை கடலில் விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக ஒரே நாளில் நேற்று ராமேஸ்வரம் கடல்பகுதியில், 1,300க்கும் மேற்பட்ட கடல் ஆமை முட்டைகளை 11 வளைகளில் இருந்து வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

தனுஷ்கோடி, பச்சப்பட்டி முதல் முகந்தராயர் சத்திரம் வரையில் இருந்து இந்த அரிய வகை கடல் ஆமை முட்டைகள் ஒரே நாளில் கண்டெடுக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்தாண்டு டிசம்பர் முதல் இதுவரையில், 500க்கும் மேற்பட்ட செயற்கை பொறிப்பகத்தில் பொறிக்கப்பட்ட கடல் ஆமை குஞ்சுகளை விரைவில் கடலில் விடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி