ஆப்நகரம்

ஓபிஎஸ் முடிவுக்கு கட்டுப்படுவோம்: மைத்ரேயன்

ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

TNN 8 Feb 2017, 11:45 am
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil will abide by the decision of ops maitreyan
ஓபிஎஸ் முடிவுக்கு கட்டுப்படுவோம்: மைத்ரேயன்


தமிழக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், நேற்றைய தினம் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த தியானத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தேன் என்று தெரிவித்தார். அத்துடன் சசிகலா குடும்பத்தின் மீதும் பல்வேறு புகார்களை முன் வைத்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக-வினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் எனது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றார். அவருடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், கட்சியின் மூத்த தலைவரும், சசிகலா எதிர்ப்பாளருமான கேபி முனுசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அவரது பேட்டியை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார். மேலும், ஓபிஎஸ்-க்கு நடந்த அவமானத்திற்கு அவரே சாட்சி. கழகத்தை கட்டி காக்கவே அமைதியாக இருந்தோம். இப்போது நிலைமை மாறிவிட்டது. ஓபிஎஸ்-ன் கருத்து மக்கள் கருத்து. தொண்டர்களின் கருத்தும் கூட. ஓபிஎஸ் முடிவிற்கு கட்டுப்படுவோம் என்றார்.
will abide by the decision of OPS: Maitreyan

அடுத்த செய்தி