ஆப்நகரம்

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்? ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

பள்ளிகளில் நேரம் மாற்றியமைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்

Samayam Tamil 12 May 2022, 1:03 pm
திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகத்தான வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.
Samayam Tamil மாணவர்கள்
மாணவர்கள்


அதன்படி, முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும், அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கினால் மாணவர்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு வர வேண்டிய சூழல் ஏற்படும். காலை சிற்றுண்டியை முடிப்பதற்கு தோராயமாக, 30 நிமிடங்களாவது ஆகும் என்பதால், பள்ளிகளின் வேலை நேரத்தை பாதிக்காத வண்ணம், வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பள்ளிகளில் நேரம் மாற்றியமைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காலை சிற்றுண்டிக்காக பள்ளி வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பள்ளிகளில் நேரம் மாற்றியமைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வைகோவையே தூக்கி எறிந்தோம்: ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சின் பின்னணி என்ன?
அதேபோல், ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் அத்துமீறலை தடுக்கும் வகையில், ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அதன்படி, “மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.” என்று அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும், மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், ஆசிரியர் மீதான பாலியல் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் மாணவர்கள் மீது மட்டும் கடுமையான நடவடிக்கை எடுப்பது சரியான அனுகுமுறை அல்ல எனவும் விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தவறாக நடந்து கொண்டால் மன்னித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கப்படுகின்றன. இதுவரை சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு TC வழங்கப்படவில்லை. பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இனியும் எடுத்த எடுப்பிலேயே TC வழங்கப்படாது. நிலைமை கைமீறி சென்றால் தான் TC வழங்கப்படும். மாணவச் செல்வங்கள் பள்ளிகளில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த, ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.” என்றார்.

அடுத்த செய்தி