ஆப்நகரம்

விடுதலை கிடைக்குமா.?

ராஜீவ்காந்தி கொலைவழக்கு சம்பந்தமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

TNN 17 Aug 2017, 9:54 am
ராஜீவ்காந்தி கொலைவழக்கு சம்பந்தமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Samayam Tamil will get liberation
விடுதலை கிடைக்குமா.?


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தன், முருகன் நளினி,பேரறிவாளன் ஆகியோர் உள்பட ஏழு பேரின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர்களை விடுவிப்பதா, வேண்டாமா என்பது குறித்த முடிவு இந்த விசாரணைக்கு பிறகு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த கொலை சம்பந்தமான வழக்கில் மத்திய, மாநில அராசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்த முடிவை உடனே எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.

Will get liberation.?

அடுத்த செய்தி