ஆப்நகரம்

​ இந்த ஆட்சி 4 ஆண்டுகளுக்கு நீடிப்பதே சந்தேகம்- திவாகரன் கருத்து

இன்று இணைந்துள்ள ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினாின் ஆட்சிகாலம் வரும் 4 ஆண்டுகள் வரை நீடிக்குமா என்பதே சந்தேகம் என்று கருத்து தொிவித்துள்ள திவாகரன், சசிகலாவை நீக்குவோம் என்ற கருத்து தொடா்பாக நீதிமன்றத்தில் முறையிடப்படும் என்றாா்.

TOI Contributor 21 Aug 2017, 6:03 pm
இன்று இணைந்துள்ள ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினாின் ஆட்சிகாலம் வரும் 4 ஆண்டுகள் வரை நீடிக்குமா என்பதே சந்தேகம் என்று கருத்து தொிவித்துள்ள திவாகரன், சசிகலாவை நீக்குவோம் என்ற கருத்து தொடா்பாக நீதிமன்றத்தில் முறையிடப்படும் என்றாா்.
Samayam Tamil will government stay in 4 years divakaran
​ இந்த ஆட்சி 4 ஆண்டுகளுக்கு நீடிப்பதே சந்தேகம்- திவாகரன் கருத்து


6 மாத காலம் பிாிவை தொடா்ந்து அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தது குறித்து கருத்து தொிவித்துள்ள சசிகலாவின் சகோதரா் திவாகரன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா். அந்த வகையில் அவா் கூறியதாவது,

ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகிய மூன்று பேருடைய அழுத்தத்திற்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆகியுள்ளனர்.
என்னிடம் எட்டு எம்.எல்.ஏ.க்கள் பேசியுள்ளார்கள். டி.டி.வி.க்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த இணைப்பு ஒரு கடை தேறாத செயல்படாது. இயக்கத்திற்கு இவா்கள் துரோகம் செய்துவிட்டதாக தான் கடைக்கோடி தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

9 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக செயல்பட்ட பொழுது, 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துள்ள டி.டி.வி. ஒரு அணியாக செயல்படக் கூடாதா? தொண்டர்கள் தினகரனோடு இருக்கிறார்கள்.

கட்சி அவர்களோடு இருப்பதாக அவர்கள் நினைத்தால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். இது கடைந்தெடுத்த துரோகம். சசிகலாவின் சீராய்வு மனு என்னவானது என்று கூட யாரும் கேட்கவில்லை.

இந்த ஆட்சி 4 ஆண்டுகாலம் கூட நீடிக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். தேர்தல் ஆணையத்தில் பொதுச் செயலாளர் விவகாரம் நிலுவையில் இருப்பதால், பொதுக் குழுவை கூட்ட முடியாது.

எங்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று தொிவித்தாா்.

Will government stay in 4 years? Divakaran

அடுத்த செய்தி