ஆப்நகரம்

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி ஏற்படுமா.?

தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு, சட்டப்பேரவையை முடக்கிவிட்டு தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

TNN 23 Aug 2017, 10:22 am
தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு, சட்டப்பேரவையை முடக்கிவிட்டு தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Samayam Tamil will governor rule in tamil nadu
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி ஏற்படுமா.?


நொடிக்கு நொடி தமிழக அரசியலில் எதிர்பாராதத் திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் நேற்று ஆளுநரிடம் எதிர்ப்பு கடிதம் அளித்துள்ளனர்.

இந்த 19 எம்.எல்.ஏக்கள் உட்பட தமிமுன் அன்சாரி, உ.தனியரசு, கருணாஸ் ஆகிய எம்.எல்.ஏக்களும் ஆதரவு அளித்துள்ளதால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இது தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஆட்சிக் கவிழும் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க அணியின் இரு அணிகளும் இணைந்தற்கு அடுத்த நிமிடமே பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் அரசிய;ல் நாடகங்களை பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் கூர்ந்து கவனித்து வருவதாகவும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழக சட்டப்பேரவையை முடக்கி ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இணைப்புப் பாலமாக செயல்பட்ட முக்கிய நபரிடம் இருவரும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Will governor rule in Tamil Nadu?

அடுத்த செய்தி