ஆப்நகரம்

அந்த விஷயத்தை செய்தால் 234 எம்.எல்.ஏக்களையும் கடத்துவோம் - தமிழக போலீஸ் அதிர்ச்சி!

தமிழக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கடத்துவோம் என்று போலீசாருக்கு வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Mar 2020, 3:37 pm
நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை கிளப்பி இருக்கும் விஷயம் சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் எதிர்ப்பு போராட்டங்கள். தமிழகத்திலும் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், “எங்கள் இயக்கத்தின் பெயர் “அல்-ஹக்”.
Samayam Tamil TN Assembly


இதில் 250 பேர் இருக்கின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது. அதையும் மீறி வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் 234 எம்.எல்.ஏக்களையும் கடத்திச் சென்றுவிடுவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கடிதம் தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறுகையில், கடிதத்தில் அனுப்புநர் முகவரி இல்லை. மொட்டையாக 234 எம்.எல்.ஏக்களையும் கடத்துவோம்.

அதுவும் கட்சி பாகுபாடு இன்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களில் யாரோ தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும். கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இயக்கம் உண்மை தானா? அது எங்கே செயல்பட்டு வருகிறது என்று விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

தாராளமா ஓடிவரும் தண்ணீர்; கிடுகிடுனு உயரும் மேட்டூர் அணை- அப்போ குடிநீர் பிரச்சினை?

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏராளமான பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டிருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் இப்படியொரு கடிதம் போலீசாருக்கு பிரச்சினையாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி