ஆப்நகரம்

அப்புறம் பேசிட்டிருக்க மாட்டேன் பாத்துக்கோ - தெறிக்கவிட்ட விஜயகாந்த் பேச்சு!

மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், தமிழக மக்களுக்கு பிரச்சினை எனில் பேசிக் கொண்டிருக்க மாட்டேன் என்று தடாலடியாக கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Mar 2020, 9:55 am
மதுரை திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், தமிழக மக்களுக்கு ஏதாவது பிரச்சினை எனில் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்தப் பேச்சு அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Samayam Tamil Vijayakanth


இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், திருப்பரங்குன்றத்தில் தான் 1973ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்முறை கூட்டம் நடத்தி 4 ஆண்டுகளுக்கு பின் முதலமைச்சர் ஆனார். இதேபோல் விஜயகாந்தும் மதுரையில் கட்சி தொடங்கி இங்கே பொதுக்கூட்டம் நடத்துகிறார்.

மக்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும். துரோகம், சூழ்ச்சி இவற்றை வென்று எதிர்நீச்சம் போட்டு வென்றவர் விஜயகாந்த். மீண்டும் வருவார். பழைய கம்பீரத்தோடு சிங்கம் போல் வெற்றி உரை நிகழ்த்துவார். தொண்டர்களின் பிரார்த்தனை அதை நிறைவேற்றித் தரும்.

பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அதேபோல் அரசியலிலும் சாதனை படைக்க வேண்டும். 2021ஆம் ஆண்டிற்கு வெகு தூரம் இல்லை. எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படுமா? புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?- இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

கெஜ்ரிவால் போன்று கட்சி தொடங்கிய ஒராண்டிலேயே விஜயகாந்த் முதலமைச்சர் ஆகியிருப்பார். இதை தமிழக மக்கள் தான் தவறவிட்டு விட்டனர். சகோதரிகளுக்கு ஒரு அறிவுரை. டிக்டாக்கில் யாரும் பங்கேற்க வேண்டாம்.

தமிழக பெண்கள் கவுரவமானவர்கள். கலாச்சாரத்தின் பொக்கிஷம். டிக்டாக் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே தமிழக பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி