ஆப்நகரம்

பழனிச்சாமியை முதல்வராக ஏற்க முடியாது: கே.பி.முனுசாமி

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க முடியாது என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

TNN 13 May 2017, 5:50 pm
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க முடியாது என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil will not accept palanisamy as cm kp munusamy
பழனிச்சாமியை முதல்வராக ஏற்க முடியாது: கே.பி.முனுசாமி


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக பிளவு கண்டுள்ளது. மேலும், ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக கட்சி மற்றும் சின்னம் முடக்கப்பட்டதால், சசிகலா அணியினர், அதிமுக அம்மா என்ற பெயரிலும், பன்னீர்செல்வம் அணியினர், அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரிலும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில், இரு அணிகளின் இணைப்பிற்கு அஸ்திவாரம் போடப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு இரு அணிகளின் சார்பிலும், குழுக்கள் அமைக்கப்பட்டதே தவிர, இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கும் வரை பேச்சுவார்த்தைக்கான உகந்த சூழல் ஏற்படாது என பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இதுபோன்று பேச்சுவார்த்தை நடத்துவதில் இரு அணிகளுக்கிடையே இழுபறி நிலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க முடியாது என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலாவால் முதல்வராக தேர்வானவர் என்பதால் பழனிச்சாமியை ஏற்க முடியாது எனவும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் முதல்வராக வேண்டும் எனவும் கூறினார்.

முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் அணியினர் கேட்பதாகவும், ஆனால், அதற்கு எடப்பாடி அணியினர் மறுப்பு தெரிவித்து வருவதால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் நிலவுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வரும் நிலையில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் மூத்த தலைவரான கே.பி.முனுசாமி இவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Will not accept palanisamy as CM: KP Munusamy

அடுத்த செய்தி