ஆப்நகரம்

ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளி திறப்பு: அரசுக்கு புதிய கோரிக்கை!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசுக்கு பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.

Samayam Tamil 1 Jul 2021, 2:50 pm
தமிழ்நாட்டில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பார்.
Samayam Tamil tn school reopen


பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு: எந்தெந்த கடைகள் எவ்வளவு நேரம் இயங்கும்?
தெலங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரிகள், பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவிலும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் கல்வி நிறுவனங்கள் விரைவில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தி உள்ளார்.

முதலில், 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். மேலும், ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்தியுள்ளார். அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலைஞருக்கு எட்டாத வெற்றிக் கனி, பறிக்கத் துடிக்கும் உதயநிதி: கொங்கு பாலிடிக்ஸ்!

ஜூலை இறுதிக்குள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஆகஸ்ட் தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி