ஆப்நகரம்

7 பேர் விடுதலை விவகாரம்; மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை உறுதியளித்துள்ளது.

Samayam Tamil 15 Sep 2018, 2:30 pm
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை உறுதியளித்துள்ளது.
Samayam Tamil Rajiv convicts


இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 7 பேர் விடுதலை குறித்து, ஆளுநர் முடிவெடுக்க தமிழக அமைச்சரவை அறிக்கை அனுப்பியிருந்தது.

இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மத்திய அரசுக்கு 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுபோன்ற அறிக்கைகள் எதுவும் மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை. தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நகல், நேற்று தான் ஆளுநர் மாளிகைக்கு கிடைத்ததது.

தேவைப்படும் போது, உரிய ஆலோசனைகள் பெறப்படும். 7 பேர் விடுதலையில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக சில ஊடகத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர். சில தொலைக்காட்சிகளும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதங்களை முன்னெடுத்தன.

ஆனால் எந்தவொரு ஆலோசனையும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்படவில்லை. இந்த வழக்கு ஒரு சிக்கலான ஒன்று. இதில் சட்ட, நிர்வாக, அரசியலமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்திய அரசமைப்பு சட்டப்படி, நியாயமான முறையில் 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Will take fair decision in Rajiv Gandhi Case Convicts says TN Governor Office.

அடுத்த செய்தி