ஆப்நகரம்

மீண்டும் புதிய தலைமைச் செயலகம்: வேலையை ஆரம்பித்தாரா ஸ்டாலின்?

தமிழ்நாடு புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட்ட போது அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 16 Sep 2021, 10:44 am
புதிய தலைமைச் செயலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil mk stalin


தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டுகளைக் கடந்து விழா கொண்டாடினாலும் இன்னும் வாடகைக் கட்டிடத்திலேயே சட்டப் பேரவை நடைபெற்று வருகிறது.

இடப் பற்றாக்குறையும் நெரிசலும் மிகுந்த சென்னை ஜார்ஜ் கோட்டையில் தான் சட்டப்பேரவையும், தலைமைச் செயலகமும் செயல்பட்டு வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக சட்டப்பேரவை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

தினகரன் வீட்டு விசேஷம்: குடும்பத்தை இணைக்கும் சசிகலா

கலைஞர் ஆட்சியில் பிரம்மாண்டமாக நல்ல இடவசதியுடன் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. சட்டப் பேரவை நடைபெறுவதற்கு மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட என பெரியளவில் அமைக்கபட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் புதிய தலைமைச் செயலகத்தை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சக அலுவலகங்கள் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டன.

ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றினார். கலைஞர் கருணாந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பெயர் இடம்பெற்ற கல்வெட்டையும் அப்புறப்படுத்தினார். மருத்துவமனைக்காக அது வடிவமைக்கப்படவில்லை என்பதால் பெரிய இடமாக இருந்தாலும் குறைவான படுக்கைகளையே அமைக்க முடிந்துள்ளது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசு அது குறித்து இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் தென் சென்னையில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூ செலவில் பன்னோக்கு மருத்துவமனை அமையப்பெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் ஓமந்தூரார் மருத்துவமனை அங்கு மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலகம் மீண்டும் செயல்படுமோ என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைமைச் செயலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சட்டசபையிலும் சில உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
திமுகவிடம் அதை எதிர்பார்க்க முடியாது: சி.வி.சண்முகம் விமர்சனம்!
இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையாக உள்ள புதிய தலைமைச் செயலகத்தில் பழைய கல்வெட்டுகள் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் புதிய தலைமைச் செயலகம் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி