ஆப்நகரம்

ஜூன் மாதத்தில் 12ஆம் வகுப்பு தேர்வா? ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 6 Apr 2021, 10:40 am
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடங்கள் கற்று வருகின்றனர். இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரியிலும், 9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதமும் நேரடி வகுப்புகள் தொடங்கின. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் 12ஆம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர்.
Samayam Tamil tn school exam


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இது போன்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் தேர்வுக்குண்டான் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
வாக்குப்பதிவு நிறைவடைந்தது.. நள்ளிரவில் வரப்போகும் சஸ்பென்ஸ்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாளான மே 3ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கப்படவுள்ளதாக தேர்வு அட்டவணை வெளியானது.

செய்முறைத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் தேர்வு நடத்தப்படுவதால் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பொதுத் தேர்வு பணிக்கு உடனடியாக திரும்புவது சற்று சிரமமானது என்பதால் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கைகள் எழுந்தன.
ஸ்டாலினை முந்திய எடப்பாடி: இதென்ன புது கணக்கா இருக்கு!
மேலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கலாமா என பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அடுத்த செய்தி