ஆப்நகரம்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? இன்று எங்கெல்லாம் கனமழை?

நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்கும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 5 Nov 2022, 7:42 am
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil cyclone


வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்கும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, வரும் நவம்பர் 10, 11ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை மற்றும் நகர்வு குறித்துத் தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பால் விலை உயர்வு... திமுகவை எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!
ஏற்கனவே கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மிக கனமழை பெய்யுமோ, புயலாக மாறுமோ என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இன்று நவம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் எம்.எஸ்.தோனி மனு!
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி