ஆப்நகரம்

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் எடுக்கும் முடிவு என்ன?

தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Samayam Tamil 23 Dec 2021, 10:51 am
ஒமைக்ரான் பாதிப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றவாது இடத்தை பிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
Samayam Tamil tamil nadu lockdown


தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் விளக்கினர்.

“தமிழ்நாட்டில் நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. 33 பேரில் 30 பேர் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள். மீதமுள்ள இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர்.
மோடி கொடுக்கும் சூப்பர் பொங்கல் பரிசு: நீட் தேர்வு ரத்தாகுமா?
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான அனைவருமே 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். அனைவருக்கும் அறிகுறி இல்லாத தொற்றே பதிவாகியுள்ளது.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 24 பேருக்கு எஸ் ஜீன் டிராப் உறுதியாகியுள்ளது. அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் நாளை அல்லது நாளை மறு நாள் வரும்” என்று தெரிவித்துள்ளனர்.
மக்களே அடுத்த ஐந்து நாள் இப்படிதான் இருக்குமாம்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெல்டா வைரஸை காட்டிலும் மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது ஒமைக்ரான் வைரஸ்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்தது. 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் முழு நேரமும் வகுப்புகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 25ஆம் தேதி இது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்றும் அதன்பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரிரு நாள்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி