ஆப்நகரம்

டெல்லி பயணம் ஸ்டாலின் அணுகுமுறையை மாற்றுமா?

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்த எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கியுள்ளன.

Samayam Tamil 12 Jun 2021, 1:13 pm
புதிதாகப் பதவியேற்கும் மாநில முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் மே 7ஆம் தேதி முதல்வாரக பதவியேற்ற ஸ்டாலின் எப்போது டெல்லி செல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் கொரோனா பரவல் புதுப்புது உச்சங்களை எட்டிவந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.
Samayam Tamil mk stalin modi


கடந்த முறை திருச்சி சென்ற போது அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் டெல்லி செல்வேன் என்று கூறினார்.
சனி, ஞாயிறு முழு ஊரடங்கு: அரசு அதிரடி அறிவிப்பு!
நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த பாதிப்பு தற்போது 16ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு பிற வளர்ச்சிப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரை சந்திக்க முதல்வர் நேரம் கேட்டுள்ள நிலையில் இன்னும் அதிகாரபூர்வமாக தேதி, நேரம் அறிவிக்கப்படவில்லை.

ஜூன் 17 அல்லது 19 ஆகிய தேதிகளில் சந்திப்பு நிகழலாம் என கூறப்படுகிறது. டெல்லி பயணத்தின் போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

ஸ்டாலினின் டெல்லி பயணத்தையும் மோடி உடனான சந்திப்பையும் அரசியல் அரங்கில் பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.
திமுக அரசு மீது ஊழல் புகார் ஆரம்பித்துவிட்டதா? 88 கோடி ரூபாய் இழப்பு!
திமுகவும், பாஜகவும் எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் திமுக, ஒன்றிய அரசின் முடிவை எதிர்கட்சியாக இருந்தபோது எதிர்த்தது. ஆட்சிக்கு வந்த பின்னரும் அது தொடர்கிறது.

இருந்தபோதும் தமிழ்நாடு அரசை வழிநடத்தும் இடத்தில் இருப்பதால் ஒன்றிய அரசுடன் ஒரேயடியாக மோதல் போக்கை ஸ்டாலின் கடைபிடிக்க மாட்டார் என்கிறார்கள்.

மேலும் இந்த சந்திப்புக்கு பின்னர் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சசிகலா தரப்பும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளது.

அடுத்த செய்தி