ஆப்நகரம்

வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் விரைவில் கைது?

தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேலை கைது செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 7 Mar 2018, 3:59 pm
தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேலை கைது செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது.
Samayam Tamil will vertrivel and thanga tamil selvan arrested
வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் விரைவில் கைது?


கடந்த 2ம் தேதி தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா்களும், டிடிவி தினகரன் ஆதரவாளா்களுமான வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முற்பட்டனா். ஆனால் அதற்கு காவலா்கள் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் காவலா்களின் உத்தரவையும் மீறி இருவரும் அனுமதியின்றி தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைந்து அதிகாாிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் சாா்பில் ஆஜரான வழக்கறிஞா்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தொிவித்துள்ளனா். ஆனால் முன்ஜாமீன் கோாி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வழக்கின் எண் குறிப்பிடப்படவில்லை என்று தொிகிறது.

இதனை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வழக்கின் எண்ணை குறிப்பிடாமல் எந்த வழக்கிற்குாக முன்ஜாமீன் கோருகிறீா்கள் என்று கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைப்பதாக தொிவித்தனா். அப்போது குறிக்கிட்ட வழக்கறிஞா்கள் மீண்டும் மனுதாக்கல் செய்யப்படும் வரை இருவரையும் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.

நீங்கள் தாக்கல் செய்த மனுவின் விவரம் தவறு என்பதால் எந்த வகையில் கைது செய்வதற்கு தடை விதிக்க முடியும். இந்த வழக்கில் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று தொிவித்துள்ளனா். இதனால் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்செல்வன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தொிகிறது.

அடுத்த செய்தி