ஆப்நகரம்

அரசு மருத்துவமனையில் மின்தடை- செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் சுமார் 3 மணிநேரம் மின்சாரம் இல்லாததால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை !

Samayam Tamil 4 Jun 2019, 10:37 am
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சுமார் 3 மணிநேரம் மின்சாரம் இல்லாததால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil அரசு மருத்துவமனையில் மின்தடை- செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை!
அரசு மருத்துவமனையில் மின்தடை- செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை!


சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில், மருத்துவமனையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து 3 மணிநேரம் ஆகியும் மின்சாரம் வராததால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் அவசர பிரிவு நோயாளிகளுக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மின்சாரம் வராததால், விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தவர்களை மருத்துவர்கள், மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு, மின்வெட்டைச் சரி செய்யும் அளவிற்கு அனுபவம் இல்லை. இதேநிலை நீடித்தால் மதுரை அரசு மருத்துவமனையில் நிகழ்ந்ததை போன்று உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என நோயாளிகள் குற்றம்சாட்டினர்.

சில தினங்களுக்கு முன், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காததால், செயற்கை சுவாசம் தடைபட்டு ஐந்து நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி