ஆப்நகரம்

சசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா?

சசிகலா விடுதலையாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் வெளியே வந்து எங்கு வசிப்பார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 28 Nov 2020, 2:14 pm
போயஸ் கார்டன் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா தரப்பால் மற்றொரு வீடு விரைவாக தயாராகி வருகிறது.
Samayam Tamil with sasikala still a few weeks away from release where will she stay
சசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா?


சசிகலாவுக்கு மட்டும் மறுக்கப்படுகிறதா?

கர்நாடக சிறைத்துறை ஜனவரி 27ஆம் தேதி சசிகலா வெளியே வருவார் என தெரிவித்துள்ளது. ஊழல் வழக்குகளில் கைதானவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என சிறைத்துறை தெரிவித்தாலும், கர்நாடக சிறையில் இந்த விதியின்படி ஏற்கெனவே சிலர் விடுதலையாகியுள்ளனர் என அமமுகவினர் கூறிவருகின்றனர். எனவே டிசம்பரிலேயே அவர் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

பொது முடக்கத்தில் இம்முறை எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

எங்கு தங்குவார்?

டிசம்பரோ, ஜனவரியோ சசிகலா வெளியே வர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் வெளியே வந்து எங்கு தங்குவார் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே எழுந்தது. ஏனெனில் சசிகலாவுக்காக போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிற்கு அருகிலேயே ஒரு பங்களா கட்டப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டு வந்த அந்த கட்டிடத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

தயாராகும் புதிய கட்டிடம்!

பள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்!

நான்கு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தின் பணிகள் தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதாக கூறுகிறார்கள். சீல் வைத்தார்களே ஒழிய கட்டிடப் பணிகளுக்கு தடை விதிக்கவில்லை என்கிறார்கள். இருப்பினும் இந்த கட்டிடம் முழுமை அடைய இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் சசிகலா தங்குவதற்கு வேறு வீடு பார்த்து கட்டிட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு தற்போது வீடு நிறைவடையும் தருவாயில் உள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

உற்சாக வரவேற்பு

தி நகரில் இளவரசியின் வீட்டுக்கு அருகில் அபிபுல்லா சாலையில் இளவரசி பெயரில் வாங்கப்பட்ட வீட்டின் பணிகள்தான் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது என்கின்றனர். ஜெயலலிதா வீட்டு பாணியில் பால்கனி அமைக்கப்பட்டு உருவாகும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கெனவே சசிகலாவின் விடுதலையை முன்னிட்டு வரவேற்பு பணிகள் திட்டமிடப்பட்டு வந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து தி.நகர் அபிபுல்லா சாலை வரை அமமுகவின் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகிவருகின்றனர்.

அடுத்த செய்தி