ஆப்நகரம்

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு: இபிஎஸ் கொண்டுவந்த தீர்மானம் - அரசு எடுக்கும் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 11 Apr 2023, 12:58 pm
தமிழ்நாட்டில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை அறிய விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
Samayam Tamil tn covid restrictions


“தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்களை அமைக்க வேண்டும், உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடு வீடாக சென்று காய்ச்ச பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்து பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தினசரி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை சுமார் 400 என்ற அளவிலும் இந்திய அளவில் 5000 என்ற அளவிலும் உள்ளது. எனவே பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்க வேண்டும். பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்: அரசிதழில் வெளியீடு - கடந்து வந்த பாதை!இதற்கு பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் நேற்று 386 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்திய அளவில் 5878 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

கேரளாவில் 2673 பேருக்கும், டெல்லியில் 484 பேருக்கும், இமாச்சல பிரதேசத்தில் 422 பேருக்கும் நேற்றைய தினம் பாதிப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிக்கும் முன்னரே தமிழ்நாடு முதல்வர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினருக்கு பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் என அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7ஆம் தேதி ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சருடன் காணொலி மூலம் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டினார்.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உடல்நிலை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டில் மிதமான பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. ஆக்ஜிசன் தேவைப்படும் படியான பாதிப்பு இல்லை. ஒருவேளை பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி