ஆப்நகரம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: சசிகலாவுக்கு நெருக்கடியா? விமோசனமா?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 6 Feb 2017, 2:00 pm
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil within one week judgement on jayalalithaa sasikala disproportionate assets case
சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: சசிகலாவுக்கு நெருக்கடியா? விமோசனமா?


சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து 4 பேரையும் விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீது எந்த நேரத்திலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற நிலையில், இதற்கான தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது, இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்து இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவை நீக்கி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தீர்ப்பு வழங்கப்படும். தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வரும்பட்சத்தில் முதல்வர் பதவியேற்கும் சசிகலா பதவியில் இருந்து இறங்க வேண்டியது இருக்கும். மீண்டும் பன்னீர் செல்வம் அந்தப் பொறுப்புக்கு வர வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி இல்லாமல், இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதாதான் அவர் மறைந்து விட்டதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினால், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் இந்த வழக்கில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவார்கள்.

கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு இவர்கள் மீது நடந்து வருகிறது.

Within one week judgement on Jayalalithaa, Sasikala Disproportionate assets case

அடுத்த செய்தி