ஆப்நகரம்

கமிஷ்னர் ஆபிஸ் முன் பெண் தற்கொலைக்கு முயற்சி!

சென்னை: வேப்பேரி போலீஸ் கமிஷ்னர் அலுவலம் முன் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jan 2019, 7:45 pm
சென்னை: வேப்பேரி போலீஸ் கமிஷ்னர் அலுவலம் முன் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பெண் தற்கொலை


மன்னடியைச் சேர்ந்த ஷீலா என்ற பெண் போலீஸார் தனது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததால், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சித்தார்.

ஷீலா சிட் பண்ட் அலுவலகத்தில் ரூ. 4 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால் சீட்டு முடிந்த பின் அந்த உரிமையாளர் பணத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பணத்தை ஏமாந்த பெண் போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது. இதனால் வேப்பேரி கமிஷ்னர் அலுவலகம் முன் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி