ஆப்நகரம்

சசிகலா புஷ்பாவுடன் என் கணவர் திருணம்; கலெக்டரிடம் கதறிய இளம்பெண்!

சசிகலா புஷ்பா எம்.பி.,யை தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை கலெக்டரிடம் இளம்பெண்ஒருவர் மனு அளித்துள்ளார்.

Samayam Tamil 21 Mar 2018, 12:25 pm
சசிகலா புஷ்பா எம்.பி.,யை தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை கலெக்டரிடம் இளம்பெண்ஒருவர் மனு அளித்துள்ளார்.
Samayam Tamil sasikala pushpa complaint


நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும், அவருடைய சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக அண்மை நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மாகாளிப்பட்டியைச் சேர்ந்த சத்யபிரியா என்பவர், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் ஒருவர், சசிகலா புஷ்பா எம்.யை தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சத்யபிரியா கூறியதாவது:

எனக்கும் டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்தி வந்த ராமசாமிக்கும் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. கணவருடன் டெல்லியில் வசித்து வந்த போது, திருமணமான சில நாட்களிலே கூடுதல் வரதட்சனை கேட்டு பிரச்னை செய்ததால், மதுரையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். நான் கர்பமாக இருந்தபோது கூட அவர் என்னை வந்து பார்க்கவில்லை.

எங்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு குழந்தை பிறந்தது. பெண் குழந்தை என்ற காரணத்தினால், டெல்லியில் இருந்து இதுவரை எங்களை பார்க்க வரவே இல்லை.மேலும், அவருடைய சகோதரிகள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவுர், சசிகலா புஷ்பாவிடம் பணிபுரிவதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியவந்தது. இந்த நிலையில், என் கணவருக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வருகிறது. இது பற்றி எனு் கணவரிடம் கேட்டால், சரியாக பதில் கூறாமல் மறுக்கிறார். சசிகலா புஷ்பாவுடன் என் கணவர் திருமணம் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். என்னோடு என் கணவரை சேர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி