ஆப்நகரம்

'சீருடையில் செம்ம போதை'... அலப்பறை செய்த பெண் காவலரை மகன் வந்து மீட்ட பரிதாபம்..

திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே மது போதையில் மயங்கி இருந்த பெண் கான்ஸ்டேபிள் ஒருவர் பயணிகளை ஒருமையில் திட்டி தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 19 Dec 2019, 2:14 pm
திண்டுக்கல் மாவட்டம் உள்ளூர் பேருந்து நிலையம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சீருடையில் இருந்த பெண் காவலர் ஒருவர் மயங்கி இருப்பதை பயணிகள் மற்றும் கடை காரர்கள் கண்டுள்ளனர். இதனால் அவருக்கு ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்த அவர்கள் பெண் காவலரை எழுப்ப முயற்சித்துள்ளனர்.
Samayam Tamil சீருடையில் செம்ம போதை... அலப்பறை செய்த பெண் காவலரை மகன் வந்து மீட்ட பரிதாபம்..


ஆனால் அவரால் எழுந்துக்க கூட முடியவில்லை. உட்கார்ந்தபடியே அங்குமிங்குமாய் நிலை தடுமாறிய அவர் மீது மது வாசனை குப்பென வந்துள்ளது. இதை அறிந்த பயணிகள் மற்றும் கடை காரர்கள் பெண் காவலரின் நிலையை குறித்து அவரது வீட்டுக்கு தெரியப்படுத்த விரும்பினர்.

அப்போது அருகில் சிதறிக்கிடந்த அவரது உடமைகளை எடுத்து வைத்த பயணிகள், அவரது செல்போனில் இருந்த மகனின் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெண் காவலரின் மகன், தாயை ஆசுவாசப்படுத்தி பயணிகளின் உதவியுடன் ஆட்டோவில் அமரவைத்துள்ளார்.


ஆனால் அப்போது பெண் காவலர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட அறியாமல் அங்கிருந்தவர்ளை ஒருமையில் திட்டியுள்ளார். பின்னர் அவரது மகன் போதையில் இருந்த பெண் காவலரை ஆட்டோவில் வீட்டிற்கு கொண்டு சென்றார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டும் பெண்கள் - செம ஐடியா செஞ்ச சென்னை போலீஸ்!

இந்த நிலையில் அப்பகுதியில் ரோந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், பஸ் ஸ்டாண்டில் பணியில் இல்லாத போலீசை குறித்து விசாரித்தார். அதற்கு அந்த பெண் காவலரின் உடல் நிலை சரியில்லாததால் அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலும் திண்டுக்கல் பகுதியில் பணியில் இருந்த பெண் காவலர் மது அருந்தும் வீடியோ காட்சி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை மேலே இணைத்துள்ளோம்.

அடுத்த செய்தி