ஆப்நகரம்

பின்னோக்கி வந்த மினி வேன் ஏறியதில் பெண்ணின் இரண்டு கால்களும் முறிந்து விபத்து!

சாலையில் நடந்து சென்ற பெண் மீது, பின்னோக்கி வந்த மினி வேன் ஏறியதில் பெண்ணின் இரண்டு கால்களும் முறிந்து விபத்துள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 May 2019, 1:27 pm
காட்பாடி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது, பின்னோக்கி வந்த மினி வேன் ஏறியதில் பெண்ணின் இரண்டு கால்களும் முறிந்து விபத்துள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பின்னோக்கி வந்த மினி வேன் ஏறியதில் பெண்ணின் இரண்டு கால்களும் முறிந்து விபத்து!
பின்னோக்கி வந்த மினி வேன் ஏறியதில் பெண்ணின் இரண்டு கால்களும் முறிந்து விபத்து!


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு அலமேலு என்ற மனைவியும், பவித்ரா(5) என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அலமேலு இன்று காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டு சேவூர் அருகே சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியில் இயங்கிவரும் எல்-சேண்டோஸ் என்ற ஷூ கம்பெனியின் மினி வேன் அலமேலு வருவதை அறியாமல் பின்னோக்கி வேகமாக சென்றது. இதில் வேனின் சக்கரம் அலமேலு மீது ஏறியதில் அவரது இரண்டு கால்களும் முறிந்தன. அக்கம்பக்கத்தினர் அலமேலுவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமணைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த அரும்பருதி கிராமத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் ஆத்திரத்தில், சேவூரில் இயங்கிவரும் ஷீ கம்பெனி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவரும் தம்பதியருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி ஷூ கம்பெனி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த திருவலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுதாக கூறிய பின்பு சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

300-க்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் இந்நிறுவனத்தில் நிறுவனத்திற்கு என்று எந்த ஒரு வாகனமும் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி