ஆப்நகரம்

லாரி அடியில் விழுந்து இளம் பெண் உடல் நசுங்கி பலி

சென்னையில் கனரக வாகனம் ஏறி இறங்கியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Samayam Tamil 20 Sep 2018, 2:40 am
சென்னையில் கனரக வாகனம் ஏறி இறங்கியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
Samayam Tamil accidents
சாலை விபத்தில் இளம் பெண் பரிதாப பலி


புளியந்தோப்பு பகுதியில் ஆண் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நிலையில் அவர் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது டாக்டர். அம்பேத்கர் சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றை அந்த இருசக்கர வாகன ஓட்டி முந்திச்செல்ல முயன்றார். அப்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் இருசக்கர வாகனம் நிதானத்தை இழக்க, அதன் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்த வந்த பெண்ணும் சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியே வந்து கொண்டிருந்த கனரக வாகனம், பெண்ணின் மீதேறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

விபத்து குறித்து அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ஓட்டுநரை அரசு மருத்துவமனிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரின் பெயர் கோபி என்பதும், அவர் பின்னால் அமர்ந்த வந்த பெண்ணின் பெயர் ஷர்மிளா என்பதும் தெரியவந்தது.

அவர்கள் இருவரும் புளியந்தோப்பிலிருந்து, கொடுங்கையூர் நோக்கி சென்று போது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி